Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Saturday, November 7, 2009

அந்தமானில் அவ்வை




அந்தமானில் அவ்வை நடராஜன்:

வி ஜி பி உலகத் தமிழ்ச் சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து நடத்திய ஒன்பதாவது திருக்குறள் மாநாடு நவம்பர் 7ம் தேதியன்று அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இனிதே நடந்தேறியது. அதன் பொருட்டு அவ்வை நரடராஜன் அவர்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர் இரவு உணவுக்கென ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றோம். படிகள் நிறைந்த அந்த விடுதிக்கு நுழைய தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்கள் கைத்தாங்கலாக அவ்வையை அழைத்துச் சென்றனர். அப்போது உணர்ச்சி மேலிட இலக்கிய மன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் "அய்யா...தமிழ் உலகமே அவ்வையின் கைப்பிடித்து நடக்கிறது. ஆனால் இந்த அவ்வை எங்களைப் பிடித்து நடக்கிறது" என்றார். அதனை அவ்வையாரும் ரசித்து மகிழ்ந்தது மேலும் சிறப்பு.