Sunday, December 26, 2010

இலக்கிய மன்றத்தில் ரமண விஜயம்


இலக்கிய மன்றத்தில் ரமண விஜயம்

கடந்த சனிக்கிழமை (25-12-2010) அன்று வழக்கமான இலக்கியமன்ற வாராந்திரக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு பரிச்சயமானவர் வந்து சேர்ந்தார்.

அவர் வேறு யாரும் அல்ல...

நமது வானிலையினை துல்லியமாக முன்கூட்டியே அறிவிக்கும் திருமிகு ரமணன் தான் அந்தப் பிரபலம்.

ஓர் அரசுக் கல்விப் பயணமாக அந்தமான் வந்த அவரை இலக்கிய மன்றம் பற்றிச் சொல்லி மன்றத்திற்கு அழைத்து வந்தவர் ஆசிரியரும் மன்ற உறுப்பினருமான திருமிகு மனோகரன் அவர்கள். அவருக்கு மன்றத்தின் சிறப்பு நன்றிகள்.

ரமணன் அவர்கள் உறுப்பினர்களின் புயல் சுனாமி தொடர்பான கேள்விகளுக்கு சளைக்காது செந்தமிழில் பதில் தந்தது சுவையான் அனுபவம் தான்.

1 comment:

  1. Sincere and heart full thanks to both Mr. Ramanan and Mr. Manohar. Thamizians are simple & great or vice versa. Mr. Ramanan is such an example!! Good job done ATIM.

    ReplyDelete