Tuesday, November 10, 2009

நன்றி மறவோம்

சமீபத்தில் நடந்த 9வது திருக்குறள் மாநாட்டை வெற்றியாக்கிய வி ஜி பி உலகத் தமிழ் சங்கம் மற்றும் இதர அறிஞர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாய் வாசித்தளித்த கவிதை.
(கவி ஆக்கம் : நகைச்சுவைக் கவிஞர் கார்மான்)

செவிக்குணவில்லாத
போழ்து-
வயிற்றுக்குக் கொடு.
சொன்னவர் வள்ளுவர்,
செய்பவர் சந்தோஷம்.

திங்கள் இரண்டாய்
தீவில் திருவிழா,
ஒன்பதாவது
திருக்குறள் மாநாடு.

இரண்டடி
முப்பால்
தந்தவர்க்கு
ஆறடியில்
அழகுச்சிலை
அளித்தவர்கள்-
விடியலும் ஜீவனும்
தந்த பிதாக்கள்!!!

தமிழகத்தில்
பருவ மழையால்
பெருவெள்ளம்.
விஜிபி உலகத்தமிழ்
சங்கத்தால்-
அந்தமானில்
தமிழ் வெள்ளம்.

அண்ணாச்சிகளின்
அன்புத்தமிழ்

குமரியின்
தமிழலை

அவ்வையின்
தமிழமுது

இராஜாதாசின்
இரத்தினத் தமிழ்

பேராசிரியர்களின்
மயக்கத்தமிழ்

உலகநாயகியின்
உன்மத்தத் தமிழ்

நெப்போலியனின்
நெத்தியடித் தமிழ்

இவையாவும்
பருகிப் பருகி
வாழ்வின் பயனை
எட்டி விட்டோம்.

வரும் நாட்களை
நீங்கள் வழங்கிய
தமிழோடு
வாழ்ந்து விடுவோம்.

தவணைமுறையின்
பிதாமகன்களே
இந்தத்தவணை
தமிழ்-
இப்போதைக்குப் போதும்.

அடுத்த தவணை
எப்போதைக்கு வரும்?

மூன்றாம் நாளாம்
இன்று...
செவிக்குணவில்லாததால்
வயிற்றுக்கு
அளிக்கிறீர்களோ?

இனி,
எதற்கு எதற்கெலாம்
நன்றி சொல்வோம்?

தமிழனும் தமிழும்
உள்ளவரை
உமை மறவோம்,
உமை மறவோம்!!!

நன்றியுடன்,
அந்தமான் தமிழர் சங்க இலக்கிய மன்ற அன்பர்கள்.
08-11-2009.

2 comments:

  1. கவிஞர் ஐயா! அவர்கள் செவிக்குணவு தந்தார்கள்.நீங்கள் கருத்துக்கு ஒரு கவிதை தந்தீர்கள். ஐயா தமிழ் நெஞ்சன் அவர்கள் உலகத்திற்கே அந்தமான் தமிழர்களின் நன்றியுணர்வை ஆவணப்படுத்திவிட்டார்.நன்றி.
    அன்புடன்
    க.நா.சாந்தி லெக்ஷ்மணன்

    ReplyDelete